நேற்று பேருந்து பயணத்தில்... நல்ல மழை பெய்தாலும் அரசு பேருந்தின் மூடமுடியாத ஜன்னல் கதவு கொண்ட ஜன்னலோர இருக்கை.... ஆனால் என்னை தவிர யாரும் நனைய வாய்ப்பில்லை... பக்கத்துல ஒரு பாட்டி... வயசு எப்படியும் நாலு ராஜ் வயசு இருக்கும் போல...அதாவது 90-95 வயசு இருக்கும்...இந்த வயசுல தனியா பஸ்ல...அதுவும் ஒரு கைல தடி, மறு கைல ஒரு மூட்டை...பார்வை மட்டும் இப்பவோ அப்பவோனு விருப்பமில்லாமல் பாட்டியிடம் ஒட்டிகிட்டு இருந்தது... கொஞ்ச நேரத்தில பாட்டி பக்கத்துல ஒரு ராஜ் வயசுல்ல பொண்ணு உட்கார்ந்தாங்க.... பாட்டி கொஞ்சம் வசதியா உட்கார்ந்து கொண்டதால் நான் நல்லா நனைஞ்சிட்டேன்...அதுவும் நல்லாதான் இருந்ததுனு மழைய வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்... அப்ப நடத்துனர் வந்து பாட்டிகிட்ட டிக்கெட் எடுக்க சொன்னாரு... காது மட்டும் நல்லா கேட்கும் போல... பாட்டி டக்குனு தன்னோட சுருக்கு பையின் அடி ஆழத்தில இருந்த ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து கை நடுக்கத்தின் காரணமாக செல்ல மறுத்த பணத்தை ஒரு வழியா அவரிடம் சேர்த்தது... அவர் பாட்டிமா இன்னும் 20₹ தாங்கனு சொன்னதும் அவர் என்ன மொழியில் பேசுகிறார் என யோசிப்பதை போல அவரைய...