மூன்றாம் உலக போர் - வைரமுத்து கடைசியாக நான் படித்த புத்தகங்களில் கொஞ்சம் பெரியது... காதலையும் விவசாயத்தையும் நன்கு ஆராய்ந்து அணு அணுவாய் பிரித்து அதன் அத்தனை கூறுகளையும் நமக்கு எடுத்தூட்டுவதில் தனக்கு நிகர் தானாக திகழும் வைரமுத்துவின் விவசாயம் குறித்த மற்றுமொரு தவிர்க்க முடியாத சகாப்தம்.... புவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் தனியார்மயமாதலும் தாராளமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் அத்தனை கூறுகளின் மீதும் தொடுத்திருக்கும் போர் தான் இந்த *மூன்றாம் உலகப் போர்*.... இயல்பில் விவசாய நாடான இந்தியாவில் ஒரு சாதாரண கிராமத்தில் *ஏழ்மையில் செல்வந்தராக* வாழும் ஒரு சாதாரண விவசாயி கருத்தமாயின் கதை... கருத்தமாயிக்கு ரெண்டு தலைமுறையா கழியாத கடன், ஒரு தலைமுறையா பேச்சுவார்த்தை இல்லாத மனைவி, பாசத்தை காட்டி வளர்த்தாலும் நெஞ்சில் ஆலகால விஷத்தை கொண்ட மூத்த மகன், பிறந்த கிராமத்தை முன்னுதாரணமாக மாற்றி மீண்டும் கிராம விவசாயத்திற்கு புத்துணர்வூட்டிய இளைய மகன், கண்ணுக்கு கூட மழைய காட்டாத மேகம், கஞ்சிக்கு கூட விளையாத மண்... இந்த மண்ணை ஒட்டுமொத்தமாக மலடாக்க நினைக்கும் தற்கால மனிதனின் ஒட்டுமொத்த உருவத்தின்...
Posts
Showing posts from September, 2017